27.08.17 ல் பாரீஸ் லாச்சப்பலில் மாணிக்க விநாயகர் தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இந்த நகர்வல நிகழ்வின் போது, இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களாகிய நாமும் முதன்முறையாக கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் எமது சுலோக அறைகூவல் மூலம் இந்நிகழ்வில் எமது ஒன்றியத்தின் நோக்கங்களை வெளிப்படுத்தியிருந்தோம். அதாவது எமது தாயகத்தில்-எமது கடந்த கால நகர்வுகள். தற்போதைய நிகழ்வுகள், எதிர்கால செயற்பாடுகள் என்பவற்றை எடுத்தியம்பி, பதாகை மற்றும் பிரசுரங்கள் மூலமாக அங்கு திரண்டிருந்த பல்லாயிரம் மக்கள் மத்தியில் எமது குறிக்கோளை வெளிப்படுத்தினோம். இதன் போது எமது ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சார்பான ஆதரவாளர்களும் குறிப்பாக மாணவர்களும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட்டது குறிப்பிடத்தக்கது!
Don
Don Entreprises
Devenir membre
Devenir beneficiaire